காதலர் தின எண்ணம்

கட்டி அனைத்து முத்தம் கொடுத்தோம்
காதலை முழுதாய் உணர்ந்தோம்

நம் விழியில் நாம் வந்த பாதை எண்ணி பார்த்தோம்

(அவன்) : மண்டியிட்டு யாசித்தேன் நீ வேண்டுமென்று
(அவள்) : குனிந்து உன்னை கண்டேன் நீயாய் இன்று

(அவன்) : காற்றில் உன் கருங்கூந்தலை சுவாசித்தேன் இன்று
(அவள்) : தொட்டு தான் தூக்கினேன் வெட்கம் கொண்டு

(அவன்) : எழுந்தேன் உன் விழியில் விழுந்தேன்
(அவள்) : கண்டேன் உன்னில் வழிந்தேன்

(அவன்) : அடைக்காமல் உன்னை என்னில் அணைத்தேன்
(அவள்) : பிரிக்காமல் என்னை உன்னிடம் வந்தேன்

(அவன்) : நொடியில் உன்னை புரிந்தேன்
(அவள்) : நொடியில் என்னை உணர்ந்தேன்

(அவன்) : உன் நாணம் கண்டு என்னை தள்ளி நின்றேன்
(அவள்) : உன் தயக்கம் கண்டு நானும் பிரிந்தேன்

(அவன்) : பிரிவால் நானும் வாடி நின்றேன்
(அவள்) : கண்ணால் உன்னை தேடி நின்றேன்

(அவன்) : தள்ளி சென்று நின்று அழுதேன்
(அவள்) : ஓடி வந்து என்னை அளித்தேன்

(அவன்) : காந்தமாய் ஒட்டி கொண்டேன்
(அவள்) : கட்டி அணைத்து இதழ் பதித்தேன்

கட்டி அனைத்து முத்தம் கொடுத்தோம்
காதலை முழுதாய் உணர்ந்தோம்

காதல் ஒரு ஷணம் என்றாலும் ஒரு யுகம் என்றாலும்
அதன் நிலை
யாசித்தல்
சுவாசித்தல்
புரிதல்
பிரிதல்
உணர்தல்
அளித்தல்
அணைத்தல்
பின்னே பதித்தல்

ஜெயராம் ஷான் திருமண நாள் வாழ்த்து

என்றும் இன்று போல்
இன்றும் அன்று போல்
நினைவில் நீயும் நானும்
ஒரு துளி பனியாய்
பார்த்து நின்றோம்
அணைத்து அன்பில் நனைந்து
சிட்டாய் அழகாய் இரண்டு
மிதமான முத்தங்கள் கொடுத்து

Followers