உள்ளம் தந்து

ஒராமண்டு இன்று
காதல் மனைவியை என் விழியால் கைது செய்து

ஒராமண்டு இன்று
நானும் வீடு கண்டு வாழ்க்கை கொண்டு

இதமான அனுபவங்கள் எத்தனனை இருந்ததென்று எண்ணுகையில்
கண்ணீர் மட்டும் மோதி நிற்கின்றன

வாழ்க்கை தருவேன் என்று கூட்டி வந்து
வாழ்வு பெற்றேன்

இருண்டு மாதங்களில் அடி பட்டும் குருதியுள் கடந்த போதும்
அழவில்லையாம் இவள்

வீரம் கண்டு வாழ்த்த கூட முடியா வண்ணம் மூர்சையில் இருந்தேனாம்
இவள் இல்லை எனிலோ என்னை பெற்ற இரு உள்ளங்கள் இல்லை
எனிலோ

புது மனிதனாய் மாறி இன்றும் கிறுக்கி கொண்டு இருக்க மாட்டேன்

என் உளமார்ந்த உள்ளம் தந்து எப்படி தீர்ப்பேன்

Followers