எது புத்தாண்டு

 எது புத்தாண்டு ??


ஜனவரி ஒன்றா , தை ஒன்றா , 

சித்திரை ஒன்றா , ஆடி ஒன்றா , 

ஐப்பசி புதுமதியா ??


சுற்றி வரும் நிலவையோ 

சுற்றும் புவியோ 

உலாவும் கதிரவனோ 

விரியும் சராசரமோ 

கடக்கும் காலம் கழிந்தன எனவும் 


நாம் கடந்த காலம் சுற்றி வரும் போது

மீண்டும் உணரப்படுவதனால் 

செய்த பிழையினை  செய்யாமல் இருந்து 

செய்த நன்றினை மேலும் நன்றாய் செய்திட

எந்நாளை  தேர்வு செய்கிறோமோ 

அந்நாளே புத்தாண்டு 


சுழலும் பூமாதேவி  உணர்த்தும் ஆதவன் 

குறிக்கும் ஒவ்வொரு நாளும் புதிதே எனினும் 

குளிர் கடந்து இயற்கை  மலரும் தை 

இயற்கை மலர்ந்து இயல்பு திரும்பும் சித்திரை 

இயல்பாய் உழுது களைத்து மழையில் நனையும் ஆடி 

மழையில் மனதை பகிர்ந்து  மகிழும் ஐப்பசி புதுமதி

சுற்றும் புவி தாய் நமக்கு அளித்த வரம் 


செய்த செயல் அதன் பலன் அறிந்து 

அர்த்தம் கண்டு பலம் பெற 

தேர்ந்தெடுக்கும் நாளே புத்தாண்டு !!!

விதைத்தவன் விவேக்

 அறிகுறியில்லாமல் அறம் செய்து 

பகுத்தறிவு நன்றென்று பரவிட செய்து 

புன்னகையில் புவி எங்கும் இறை விதைத்து

இறையென்றும் இரை அளிக்க 

மரமெங்கும் விதைத்து 

பிரியாவிடையாய் நம்பிக்கையும் விதைத்து

எங்களை சிரிப்பில் நனைத்து 

விதையாய் உன்னெண்ணம் தந்தவனே 

உலகெங்கும் நீ வ்யாபித்திருப்பாய் 

உன் பேரிற்கு ஏற்றாற்போல்

விவேகானந்தனே  

பஞ்சான அணில் குஞ்சு ( Softie Squirrel Kutti)

பஞ்சான அணில் குஞ்சு ( Softie Squirrel Kutti)

பஞ்சு போல இருக்கும் பந்து
மேல மோதியது ஒரு அணில் குஞ்சு

பயந்த குஞ்சு கொஞ்சம் கெஞ்சுது கண்டு
தேடி ஓடியது அம்மா கண்ணு

கீச் கீச்சென குஞ்சு கத்த
பிஞ்சு அம்மா ஓடி வந்து நின்னது
எங்கள கண்டு

தள்ளி நாங்க நிக்க போக
குட்டியும் அம்மாவும் ஒண்ணா சேர

முத்தமிட்ட பின் தாய் ஓட
தொடர முடியாம  சேய் திணற
கவ்வி கொண்டு தாய் ஓட

எல்லாம் நல்ல படியாய் முடிய போக
கூட்டினை அடைந்தது  குட்டி நலமாக

(Illustrated by : Aparna ) ( உருவகம் தீட்டியது : அபர்ணா )

On to a Softie like ball
dashed a beautiful Baby Squirrel

Frightened a little, the Lil Cried,
Came searching the mother Squirrel

Hearing Keech Keech of the little one
Came running pinju amma,put a sudden brake seeing us

Giving way (we) moving away a little

Mom and baby came together
joyfully kissing each other

Seeing Little unable to follow
Ran taking Little in her mouth Motherly

All went Well-fully
The Lil reached Nest joyfully

ஒளிரும் சாகரம் ( Beach Beacons )

புத்தொளியில்  மிளிரும் சாகரம் 
கண்ணுக்கெட்டா மானுடம் , எங்கும் அற்புதம்
அமைதியாய் இருந்து , புவி பகிர்ந்து 
எவரையும் உணராது , அனைவரையும் ஆதரிக்கும் !!


( ஓவியம் : அபர்ணா )



(Art : Aparna)

Beach Beacons Light Bliss,
Men at no sight, Wonders Around
Staying Calm , Sharing Earth
Aware of None, Cares for Everyone !!



எதையும் தேடு

எதையும்   தேடு 

அழகு ஒன்று நன்றாய் தெரியுது
அதை நாட (மனம்) பாதையின்றி தவிக்குது
பலம் கொஞ்சம் இருக்குது
நெஞ்சில் உறம் மிச்சம் இருக்குது
அனால் மனம் ஏனோ  பதைக்குது
விடை காண துடிக்குது
விடை தேடவா, அழகை தேடவா ?

தந்தவள் தாய்

தந்தவள் தாய்

வண்ணம்  பல தந்து
அன்பாய் பழக செய்து
அறம் நெறி நேர்ப்பித்து
உண்ண பல குடுத்து
தன்னையே அற்பணித்து
தந்தை தந்தவளாம் தாய்

நீ இன்றி நான் ஏது ?

மலர்ந்ததும் வருகிறேன்
பட்டாம் பூச்சியாய் !
நீ தீட்டிய வண்ணமிதை காண்பிக்க !!


பொங்கல் 2020

தை திருநாள் இன்று
மிளிரும் பொன் போல்
உள்ளத்தில் அறம் நாடி
மேன்மையில் மென்மை கண்டு 
வாழ்த்துக்கள் பொங்கி
வளர்ச்சி தளர்ச்சியின்றி
வற்றாமல் பொங்கல்
பூமி தாய் அவள் அருளட்டும்
வருணன் பொங்கி நீர் நிறையட்டும்
அக்னி சுரந்து சக்தி பெருகட்டும்
வாயு வீசி நற்செய்தி எங்கும் பரவட்டும்
வானம் அதில்  நன்மைகள் தரும் ஆதவன் ஒளிரட்டும்
இயற்கையை போற்றி பேணுவோம்.

புத்தாண்டு 2020

சென்ற ஆண்டு சென்றாகி விட்டது ,
வரும் ஆண்டு வந்தாகி விட்டது
ஆண்டும் புத்தாண்டும் என்றும் வந்து கொண்டிருக்கும்
இவ்வாண்டும் புத்தாண்டு வந்தே விட்டது
இனி ஒரு விதி செய்வோமென்றே , புதிதாய் கொள்கை கொள்வோம்
புத்தாண்டு தோறும்.

இல்லை இனி ஒரு விதி நிச்சயம் செய்வோம்
கலாம் கண்ட 2020 வந்தே விட்டது
இனியாவது இனிதாய் இந்தியனாய் 
தேசம் போற்றி கனவை நினைவாக்க
ஒரு படியேனும் முன்னெடுத்து வைப்போம்.

பாடம் படிப்போம், பட்டம் விடுவோம்
இடம் கொடுப்போம், வயல் நாடுவோம்
மழை வேண்டுவோம், மந்தம் போக்குவோம்
மண் காப்போம், மரம் வளர்ப்போம்
தொழில் செய்வோம், அர்த்தம்  போற்றுவோம்
ஆலைகள் அமைப்போம் , கெடாத சாலைகள் செய்வோம்
பொருள் பல செய்திடுவோம் , திரவியம் கூட்டுவோம்
அறம் வளர்ப்போம், மதம் மறப்போம்

போதும் பதினாறு பெற்றாகிவிட்டது
இவை அனைத்தும் ஒழுங்காய் செயலாக்குவோம்
ஆண்டு அனைத்தும் இனிதாய் இருக்கவே 

அடல் - உன்னதமான உறுதி


அன்பாலே உயரம் தொட்டவர்,
திகட்டாத கவி பாகு அவர்,
உறுதியாய் தொண்டு ஆற்றியவர் ,
தேனீ போல் அயராது உழைத்தவர் ,
சுய உதவி குழுக்கள்  போற்றி மதித்தவர்,
பயமற்று பொக்ரான் நடத்தியவர் ,
எங்கள் கலாமை எங்களுக்கு தந்தவர்,
கார்கில்லை  காத்தவர் ,
தேசத்தின் வலியை உணர்ந்தவர்,
எங்களை வழி நடத்தியவர்,
அனைவருக்கும் பிடித்தவர்,
என்றும் இன்று போல் காலத்தில் வாழ்பவர் ,
அலட்டாத எங்கள் அடல் அவர் !!

Freedom to Me Is



Freedom to me is, being thyself!
Freedom to me is, realizing oneself!
Freedom to me is, yielding myself!

Being human (thyself), loving every living being,
Realizing mind (oneself), bowing to every factual reality,
Yielding Compassion(myself), treating everyone with empathy!

Thanking my fathers and forefathers,
Letting me play with my motherland,
Without Yielding to somebody else’s interest,
Without realizing that I am being taken for granted,
Without being able to feel that I am divided!

Freedom to me is, all their sacrifice!
Freedom to me is, thanking them everyday -
Making India Stronger, Safer and Success Filled

Happy Independence Day!!


எதற்கானது சுதந்திரம்

 சுதந்திரம் என்பது எனக்கு, நானாய்  இருப்பது
சுதந்திரம் என்பது எனக்கு , என்னை அறிவது 
சுதந்திரம் என்பது எனக்கு , என்னை அளிப்பது ,

மனிதனாய் இருப்பது, அணைத்து உயிரிடமும் அன்பை பகிர்ந்து,
மனத்தை  அறிவது, மெய்ப்பொருள்  கண்டு வணங்கிட்டு ,
மனிதம் அளிப்பது , மனிதனாய் எல்லாரையும் நடத்திட்டு,

நன்றிகள் கூறுகிறேன் பாட்டன் முப்பாட்டனுக்கு ,
என்னை எம் தாய்நாட்டில் விளையாட செய்ததற்கு ,

இல்லையெனில் அளித்திருப்பேன் , என்னை மற்றவர் தேவைக்கு,
இல்லையெனில் அறியாமல் அடிமை பட்டு இருந்திருப்பேன் ,
இல்லையெனில் உணராமல் இருந்திருப்பேன், பிரிக்கப்பட்டேன் என்று ,

சுதந்திரம் என்பது எனக்கு, அவர்களின் தியாகம்  தான் 
சுதந்திரம் என்பது எனக்கு , தினம் தினம் கூறும் நன்றி 

பாரதம்  இதை  உறுதியானதாய் அமைதியானதாய் வெற்றிகள் 
நிறய  செய்வேனென்று !!


இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!

கலைஞர் நீர் !!

கலைஞர்  நீர் !!

தக்ஷிணாமூர்த்தியாய் பிறந்து 
தென்னகத்தை ஆட்சி புரிந்தீரே !

கதை பல எழுதி பேசி,
நிதி பல ஈன்று ,
பொருள் நிதி நாட்டில் சுழல செய்தீரே !!

கருத்துக்கள் பேதமின்றி இணைத்து 
வேறுபாட்டினை பேசுவீரே !!

உம்மொழிதனை எண்டென்றும் 
எம்ஜனம்  மறவாது நீர் வாழ்ந்திடுவீரே !!


நட்பின்பால் ( இது குறள் அல்ல )


குரல்

நடந்ததையும்  நடப்பதையும்  நாடுவதையும்  பகிர்ந்திட
மனம்தேடும்  கூடாரம்  நட்பு !

நட்பதனில் இனம் காணும் மனம் ,
குணமதனை அறிந்தே சேரும் !


குறிப்பு 

பரப்பு அதனில் பகுதி பாராமல், (விட்டு கொடுத்தல்)
பிறப்பதனில்  சேதி  கேளாமல் , (பிரிவு அறிதல் )
இடர் தனில் இடம் கொடாமல்,  ( திடம் தருதல் )
வலு சேர்க்கும்  ஓவியம்,
அழகாய் காட்சி தரும் கூடாரம் !! ( மனதில் ஒசந்து பதிந்திடும் )


Learning Virtue in the Acropolis

Passionately With our Daughter leading
with the lady of the house, along multiple acropolis
forts to be seen, this time 
went to see Bidar, Medak Forts 

Bordering the fort walls, grasslands on the trails of hill
Sensitize as a wonderful place for riding horses !
Begins  from the Mouth of the Fort  the beauty of the interiors of
Rangeen Mahal, Old Fort, Long walkways
Heard all these been constructed by Bahmaniyars 

From the Sikhs who built wonderful Gurudwara 
Without learning from where did they come !

Awestruck were we by the usual practices at all places
of the sikhs , ate langar by the sikhs , on the daughter's wish
With a feeling , Ask what ever  , Tell to Show the World 

With an energy that sprang at Jharni Narasimha
Walked through the Spring Waters and Sat Praying 

As the Spring flew down through the hills
Merging in the confluence of flood of the Bhakti
Crossing the Manjira that flows like the Manjal River  
Attained the fort of Medaka Durgham built by Kakkatiyar
Staying in there and Climbing in the cohort of Natures' music
Entering Asia's largest Cathedral Praying
At the Confluence of Seven Rivulets of Vana Durga
Returned back with Blessings of Vidya Saraswathi 

Thinking through, Without Madness for Minds to Unite
Par Faiths, Let us Gather and Dance the spirit 
in the land of virtue thus

Life actuated by love and virtue,
Endows it with character and happiness !!

அரணில் அறன் அறிதல்

அன்புடன் எம் மகள் வழி நடத்த
அரண் பல கானில் மனையாள் உடன் 
கோட்டை பல காட்டிட , இம்முறை
சென்றுவந்தோம் பீதர், மேதக் அரண் காண

கோட்டை வெளியில் புல்வெளியாய் மலை சாரல்
குதிரைகள் ஓட்ட அழகான இடமென தோன
கோட்டை வாயில் முதல் அழகாய் உள்கட்டு 
ரங்கீன் மஹால் , பழைய கோட்டை, நெடும்பாதை
இவ்வனைத்தும் பஹ்மானியர் கட்டிய தென்று 

சீக்கியர் அழகாய் குருவாயில் கட்டியிருக்க 
அதனில் கேட்டறிந்தோம், அவர்கள் வந்த கதை கேட்காமல் !

மெய்சிலிர்த்து போனோம் எப்போதும் எவ்விடத்திலும் இருக்கும்
சீக்கியர் முறை கண்டு , மகள் ஆசைக்கினங்க லங்கர் உட்கொண்டு
உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்ட சொல்லென 

ஊற்றாய் பெருகி வந்த சக்தி அங்கு ஜார்னி நரசிம்ஹனை 
ஊற்றில் நடந்து சென்று கண்டு களித்தோம் வேண்டி அமர்ந்து !

அழகாய் நீறு ஊற்று மலையில் இருந்து இறங்கி வர 
திரு நீறு பூசி பக்தி வெள்ளம் அங்கு வெள்ளத்தில் கலந்து 

மஞ்சள் ஆறு போல மஞ்சிரா வழிந்தோட தேக்கம் ஒன்றை 
கடந்து மேதகு துர்கம் அடைந்து அங்கு காகடியர் கட்டிய கோட்டை 
அதில் தங்கி அதன் மீதேறி இசையாய் இயற்க்கை ரசித்து 
ஆசியாவில் பெரிதாய் இருக்கும் இயேசுவின் தேவாலயம் சென்று
ஏழு ஆறு இணையும் வன துர்க்கை இடம் வேண்டி 
வித்யா சரஸ்வதியிடம் ஆசி பெற்றே வந்தோம்

எண்ணி பார்க்கையில் மதமின்றி மனங்கள் சேர 
மதமற்று கூடுவோம் கூத்தாடுவோம் 
புண்ணிய தேசமிதில்
அன்பும் அறனும் உடைத்தாயின் வாழ்க்கை 
பண்பும் பயனும் அது !!







ஆசிரியர் தினம் 2017


இருள் நீக்கும் ஆசிரியர் :
பெரியர் என்றாலும் சிரியர் என்றாலும் கற்று தரும் குணமிதை
கற்பித்து என்னையும் ஆசான் ஆக்கிய சான்றோர் போற்றி !

பொருள் உணர்த்தும் ஆசான்:
பாரதம் ஊன்றிய கவியே வள்ளலே போற்றி, நீ
காட்டிய பாதையிலே (நீ) சிற்பித்த ரதத்தினை, (நீ)
செலுத்தி செல்ல கற்று தருவாயோ , குருவே சரணம் !

வேதனை அடைந்தது மனம், கல்வி வேள்வியில் எரியுது உயிர்,
நீ கற்று தந்ததை , எவரும் இங்கு சீண்டவே இல்லை !!
கல்வி தரம் என்று கூறி தேர்வு அதனை எழுதவே செய்து,
தேர்ச்சி பெறாவிடில் உயிரும் நீத்து,
இது அல்லவே நீ கண்ட பார் புகழும் தேசம்.
வாழ்வில் ஒரு கட்டம் தேர்வு என்று கற்று தரவில்லையே எவரும்,

கற்ற தொழுகு
கேட்டிலுந் துணிந்து நில்
கவ்வியதை விடேல்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
துன்பம் மறந்திடு
தோல்வியிற் கலங்கேல்
நன்று கருது
நாளெலாம் வினைசெய்
நினைப்பது முடியும்

நீ தந்த மந்திரமிதை
உறக்க சொல்வேன் ஒவ்வொரு நாளும் சொல்வேன்
என்றே கற்று தருவோம்
இனி ஒரு விதி செய்வோம் !

குருவே போற்றி போற்றி !!

மாலுமி மருதுவின் மாமுல் பயணம்

செந்தூரா நீ செல்லும் தூரம்
எங்கும் வீசும் வாசம் அனைத்தும்
எங்கள் பாசம் இருக்கும்

நாடிகள் மையில் , நீ கடக்கும்
நாட்டிகல் மைல் எல்லாம்
சீராய் இருக்க பிரார்த்தித்து அனுப்புகிறோம்

பாரெல்லாம் நீராய் பார்த்து மகிழ்ந்தே
சென்று வா பாண்டியா !!

தேசத்தின் நேசம்

வேதனை அடையிது மனம்
இங்கு சினம் கொண்டு சீறுது குணம்
ஆச்சு ஆட்சி இல்லை எனில்
நச்சு கக்குது நாவில்

வளர்ச்சி கண்டு பொறாமை கொண்டு
செய்வதறியாது துரோகம் புரியும்
மனம் கொண்டு வாழ்வாரோ ??

பாரதம் கண்டேதெல்லாம் அற்றவநெல்லாம்
பொறாமை தீயில் வீழ்ந்தோரே என்றும் ..

தேசம் வீழ்ந்தாவது நான்
பீடத்தில் அமர்வேன் என்று
பேசி திரிவோர் எல்லாம் அறிவாரோ
துரோகிகள் தான் முதலில் வீழ்வோர் என்று

பயமில்லை என்றும் எமக்கு
நூறு கோடி போராளி இருக்க
காற்றை கூட காப்பாற்றி
சேர்ந்தே காத்து நிற்போம் !!

மூணு ஆறு

மலையில் மழை சாரலில் நாங்கள்
கொஞ்சும் நெஞ்சம்  தீண்ட

பசுந் தேயிலை தோட்டம் நடுவில்
ரோஜா கூட்டம் சேர

நட்பின் முதன்மறை வழியில்
பின்வந்து வாரிசும் பயில

மூணு ஆறு சேர்ந்தது இடத்தினில்
முழு மூச்சு எதிரொலிக்க

நட்பு காதல் பாசம்மூன்றும் கிடைத்ததால்
கம்பீரமாய் நின்று பார்க்க

படகினில் மீதேறி மழையில் மலையில்
அருவியாய் நீரும் ஓடிட

கூடே சேர்ந்தது ஜோடி புறாக்கள்
புகையாய் படம்பல எடுத்திட

ஏதுமறியாது போனாலும் நடுக் காட்டில்
தனிமையின்றி கூட்டமாய் குதூகளிதோம்

இதமாய் தேனீர் காடுகள் நடுவில்
கண்ணன் தேவன் என்றே

நூறாவது நாள்

அறுந்த அந்த சங்கிலி இனணந்தது அன்று
அறிமுகமன்றி அறியா பல முகம் வந்தது
இலகுவாய் இனிக்க இனிக்க
இணைத்து தினமும் பல கூட்டம்
உண்டதையும் கண்டதையும் இமைக்காமல்
உணர்ச்சிகள் வரைந்து வலையுலகம்
எங்கும்  காலை முதல் காலை வரை
என்றும் எப்பொழுதும் சிரித்தே பேசி
ஒவ்வொன்றும் நெஞ்சினில் நீங்கா இருக்க
ஒரு முறையேனும் யாரும் படிக்காமலிருப்பதில்லை நாளும்
ஐயமின்றி துணை இருப்போம் என்ற எண்ணம்
ஈடேற சதம் இன்று சபதம் இன்றி
ஆர்ப்பரிப்போம் பிணைந்தே என்றும்

- இப்படிக்கு போகன்

Followers