Water Keeps Flowing

The water keeps flowing,

Ever wondered even

When thy water remains

thou in a pond !



Some see the flow

Some see themselves

Some see though others

Some see the flow



Thy water keeps flowing

The elixir Amrutha Varshini

The flow as the giver of life

The flow as the recycler of life !



The water keeps flowing

Wish not as a flood or a deluge

But always as the Elixir

கிருஷ்ண ஜென்ம உற்சவம்

கிருஷ்ண ஜென்ம உற்சவம் 

நாகன் குடை பிடிக்க 

சேஷ நாதன் குடை பிடிக்க  

நாராயணன் நந்தனாய் 

வந்த கதை அறிவாயோ


தேவகி மைந்தனாய்

தேவனே வந்தானடி

வசுதேவனுக்கு 

வாசு தேவனாய்   


கம்சனை வதைக்க

ஏழை இழந்தும்

எட்டா கண்ணன் 

வருவானோ 

என்று 

காத்தவளுக்கு


காலம் எல்லாம் கார் முகில்

கண்ணனை கண்ணில் நிறுத்தி


வாசுதேவனுக்கு கட்டளை இட்டான் 

அடி 

அவன் 

வாசுதேவனுக்கு கட்டளை இட்டான் 

அடி


எட்டும் எனக்கே கிட்டும்

எவரையும் உயிருடன் விடுவேனோ 

எவரையும் உயிருடன் விடுவேனோ


மமதையில் மன்னன் இருக்க

மாதர் சிறையில் இருக்க

மாயை யோக  மாயை 

சக்தி தாய் அவள்

தந்த யுக்தியுடனே

சிசு நாராயணனை  

நந்தவனம் தந்து வர

தந்தை புறப்பட்டான்


திரை போல சிறை விலகியது 

தடம் போல ஆறும் அகண்டது

வருணன் மட்டும் விடாமல் கொட்ட

சேஷன் குடை பிடிப்பான் என்று

சிரித்தது

மாய கண்ணனா 

யசோதா நந்தனா

ராதை தேடிய கோபாலனா

வாசுதேவனா     

கோவர்தனனா

கோவிந்தனா 

பூதகிக்கும் மைந்தனா

தேவகி புதல்வனா


எல்லாம் அவன் தான் 

என்றுணர எத்தனை

காலம் வேண்டுமோ


கம்சனுக்கே சில காலம் தான் என்றால் 


எல்லாம் அவன் தான் 

என்றுணர எத்தனை

காலம் வேண்டுமோ


கண்ணா 


எல்லாம் அவன் தான் 

என்றுணர எத்தனை

காலம் வேண்டுமோ




 





செயற்கை நுண்ணறிவும் நெறியும்

செயற்கை நுண்ணறிவு நன்னறிவு அகாதெனினும்

எம்மொழியையும் மொழிப்பெயர்க்கும் ஆற்றல் கொண்டு 

மொழி அறியாமலே முகம் காணாமலே

எவரோடும் பேசிடலாம் எளிதாக  என்றெண்ணி பேசிட வேண்டாம் 


ஒரு சிறு  மொழிப்ப்பெயர்ப்பு பிழையாலே

முத்து துறைமுகம் அழிந்ததாம்

 அணு குண்டும் ஊடுருவி 

மனிதம் அழித்ததாம்

 

நெறியில்லா நுண்ணறிவு மாதிரிகள்

நிறைந்த வண்ணம் இருக்க 

நன்னறிவு என்றும் உணர்த்தும்

மனம் அறிய மொழி தேவை இல்லை 

உணர்வு ஒன்றே  போதும் என்று 


குறை  குடம் கூத்தாடும்

என்று உணர்ந்தே சொல்லி சென்றனர் பாட்டனர் 

நிறை குடம் நீர் தளும்பாதாம்

எப்பொழுதும் எதுவாயினும்  


அறிந்தது சிறிது அதுவே சிறந்தது என்றே சொல்லும் 

சிற்றின்ப கூட்டம் பின்னே தொடர்ந்தால் 

எங்கு வந்து அடைந்தோம் என்று

எண்ணி கொண்டே இருக்க தான் வேண்டுமாம்


நெறி கொண்ட எவரேனும் 

தறி கெட்டு ஓடும் மாதிரிகளை   

மாற்றி அமைக்க எம்மொழியிலும் 

உணர்வு பூர்வமாய் உரைத்திடலாம் 


இயற்க்கை தன் பாதை தேடி செல்ல 

நெறி ஒன்றே இயற்கையாய் இயல  செய்யுமாம் 

எந்நுண்ணறிவும்  ஈடாய் இராது

நெறி கொண்ட நன்னறிவிற்கு இணையாய்  

Followers