செயற்கை நுண்ணறிவும் நெறியும்

செயற்கை நுண்ணறிவு நன்னறிவு அகாதெனினும்

எம்மொழியையும் மொழிப்பெயர்க்கும் ஆற்றல் கொண்டு 

மொழி அறியாமலே முகம் காணாமலே

எவரோடும் பேசிடலாம் எளிதாக  என்றெண்ணி பேசிட வேண்டாம் 


ஒரு சிறு  மொழிப்ப்பெயர்ப்பு பிழையாலே

முத்து துறைமுகம் அழிந்ததாம்

 அணு குண்டும் ஊடுருவி 

மனிதம் அழித்ததாம்

 

நெறியில்லா நுண்ணறிவு மாதிரிகள்

நிறைந்த வண்ணம் இருக்க 

நன்னறிவு என்றும் உணர்த்தும்

மனம் அறிய மொழி தேவை இல்லை 

உணர்வு ஒன்றே  போதும் என்று 


குறை  குடம் கூத்தாடும்

என்று உணர்ந்தே சொல்லி சென்றனர் பாட்டனர் 

நிறை குடம் நீர் தளும்பாதாம்

எப்பொழுதும் எதுவாயினும்  


அறிந்தது சிறிது அதுவே சிறந்தது என்றே சொல்லும் 

சிற்றின்ப கூட்டம் பின்னே தொடர்ந்தால் 

எங்கு வந்து அடைந்தோம் என்று

எண்ணி கொண்டே இருக்க தான் வேண்டுமாம்


நெறி கொண்ட எவரேனும் 

தறி கெட்டு ஓடும் மாதிரிகளை   

மாற்றி அமைக்க எம்மொழியிலும் 

உணர்வு பூர்வமாய் உரைத்திடலாம் 


இயற்க்கை தன் பாதை தேடி செல்ல 

நெறி ஒன்றே இயற்கையாய் இயல  செய்யுமாம் 

எந்நுண்ணறிவும்  ஈடாய் இராது

நெறி கொண்ட நன்னறிவிற்கு இணையாய்  

எது புத்தாண்டு

 எது புத்தாண்டு ??


ஜனவரி ஒன்றா , தை ஒன்றா , 

சித்திரை ஒன்றா , ஆடி ஒன்றா , 

ஐப்பசி புதுமதியா ??


சுற்றி வரும் நிலவையோ 

சுற்றும் புவியோ 

உலாவும் கதிரவனோ 

விரியும் சராசரமோ 

கடக்கும் காலம் கழிந்தன எனவும் 


நாம் கடந்த காலம் சுற்றி வரும் போது

மீண்டும் உணரப்படுவதனால் 

செய்த பிழையினை  செய்யாமல் இருந்து 

செய்த நன்றினை மேலும் நன்றாய் செய்திட

எந்நாளை  தேர்வு செய்கிறோமோ 

அந்நாளே புத்தாண்டு 


சுழலும் பூமாதேவி  உணர்த்தும் ஆதவன் 

குறிக்கும் ஒவ்வொரு நாளும் புதிதே எனினும் 

குளிர் கடந்து இயற்கை  மலரும் தை 

இயற்கை மலர்ந்து இயல்பு திரும்பும் சித்திரை 

இயல்பாய் உழுது களைத்து மழையில் நனையும் ஆடி 

மழையில் மனதை பகிர்ந்து  மகிழும் ஐப்பசி புதுமதி

சுற்றும் புவி தாய் நமக்கு அளித்த வரம் 


செய்த செயல் அதன் பலன் அறிந்து 

அர்த்தம் கண்டு பலம் பெற 

தேர்ந்தெடுக்கும் நாளே புத்தாண்டு !!!

விதைத்தவன் விவேக்

 அறிகுறியில்லாமல் அறம் செய்து 

பகுத்தறிவு நன்றென்று பரவிட செய்து 

புன்னகையில் புவி எங்கும் இறை விதைத்து

இறையென்றும் இரை அளிக்க 

மரமெங்கும் விதைத்து 

பிரியாவிடையாய் நம்பிக்கையும் விதைத்து

எங்களை சிரிப்பில் நனைத்து 

விதையாய் உன்னெண்ணம் தந்தவனே 

உலகெங்கும் நீ வ்யாபித்திருப்பாய் 

உன் பேரிற்கு ஏற்றாற்போல்

விவேகானந்தனே  

Followers