ராதயின் தேடல்

உண்மை சொல்லி அழைத்தால் வருவானோ
கள்ளன் கண்ணன் !!
நினைவிலே நின்றாலும் வெண்ணை திருடி,
என்னை திருடிய கமலன் மாலன்
குழலில் மெல்லிசை கேட்டு
என் இச்சை தந்தேனே
உண்மை சொல்லி அழைத்தால்
வருவானோகள்ளன் கண்ணன் !!
காளிங்கன் சிரத்தில்,கோகர்ணன் கையில்
நிறுத்தி மாயை புரிந்தால்
என்ன செய்வேன் அடி நானும் மயங்காமல் ..
உண்மை சொல்லி அழைத்தாள் வருவானோ கமலன்..
விழியில் வேல்நிருத்தி மண்ணுண்டு உலகம் காட்டிய கள்ளா..
நீ இல்லாமல் இன் ராதயின் மனமில்லை...
நினைத்தாலே வருவாயோ கண்ணா...
கண்ணன் மீது காதல் உண்டு என்றேன்
அதனை சொல்லி சொல்லி கன்றிடம் உன்னையே கண்டேன்..
வந்து விடு, போரும் உன் ஆடல் விளையாடல்..
காதலை சொல்ல சொல்லி அலைகிறேன் வருவாயோ கண்ணனா..

!!!! உண்மை சொல்கிறேன் !!!!

சத்தியம் என்பது கடமை ,
அதை சொல்லி தருவது நன்மை !
வாழ்க்கை என்பது வலிமை ,
அதை வாங்கி தருவது உண்மை !
லட்சியம் என்பது வெற்றி ,
அதை தேடி தருவது வாய்மை !
வெள்ளி என்பது வெண்மை ,
திங்கள் வெண்மை என்பது பொய்மை !
வியாழன் என்பது பெரிது ,
வாழ்க்கை என்பது எளிது ,
உன்னிடம் உண்மை மட்டும் இருந்தால் !
வாழ சொல்வது இனிது ,
வாழ்ந்து காட்டுவது .........???
உன் திடத்தில் !!
திட்டம் போட்டு கொள்ளை அடிக்கலாம்,
வட்டம் போட்டு கட்டம் கட்டலாம் ,
சட்டம் தீட்டி உண்மை கோரலாம்,
தேடி செல்வது உண்மை இல்லை
உன்னிடம் உள்ள உணர்வு போரும்
சட்டம் தேவை இல்லை !!
சத்தம் போட்டு பொய் சொல்லலாம் ,
யாரும் நம்பும் வரை உனக்கு துரோகம்
செய்யலாம் ,
உண்மை கண்டு நீ அஞ்சும்
தருணம் உன்னிடம் இருப்பது
பயம் மட்டும் தான்!!
அரண்டவன் ஆண்டவன் ஆகலாம்,
உண்மை மட்டும் கூறும் சமயத்தில் !
பயந்த நீ புத்தன் ஆகிறாய் ,
ஆசை துறக்காமல் அகிலம் வெறுக்காமல்,
உண்மை மட்டும் பேசி ,
ஆதலால் யோசி!!
உண்மை சொல்லி அழைக்கிறேன்
கந்தன் வருகிறான் கண்ணனும் வருகிறான்,
என்ன வென்று கேட்டேன்?
வெற்றி உனது என்கிறான்!!
உண்மையில் உண்மையின் பலம கண்டு, thi
தொன்றென உண்மை சொல்லியிருக்கிறேன்.

யோசித்து வாகளிப்போம்

நீயும் நானும் ஒன்று தான்
நாம் என்பது எனது அகும் வரை

நீயும் நானும் ஒன்று தான்
போர் என்பது புதிராகும் வரை

நீயும் நானும் ஒன்று தான்
வாழ் என்பது துடிப்பு அகும் வரை

நீயும் நானும் ஒன்று தான்
உணவு என்பது உனதோ எனதோ அகும் வரை

நீயும் நானும் ஒன்று தான்
உயிர் என்பது உடல் ஆகி துயிலாகும் போது

இவை இப்படி இருக்க , எப்படி நீயும் நானும் வேறானோம்
ஒன்றே வேர் ஒன்றே நீர் என்றபோதும் வேறானோம்
ஏன் என்றே கேள்வி கேட்காமல் எவனோ சொன்னான்
இவன் செய்வான் என்று வாக்களித்து துடித்து
இவனாவது செய்வான் என்றே நம்பி!!
இனியாவது யோசித்து வாகளிப்போம்

Followers