வாரணம் ஆயிரம்

ஆயிரம் வாரணம் கொண்டு வந்தேன் உனைக் காணவே
வந்தனம் செய்ய நித்திரை கேட்டு முத்திரை பதிக்க
உழைத்த என் நெஞ்சம் இன்று உன்னை கண்டு
நித்திரை கெட்டதே..

முன்தினம் பார்த்தேன் பார்த்தும் வென்றேன்
நெஞ்சத்தில் or இடம் தந்து
தோற்றேனே தோற்றேனே உனை மறக்க
உனை மறக்க முன்தினம் தானே

இத்தினம் வந்தேனே சல்லடை கண்ணோடு
உன்னிடம் உன்னை தன் வசம் செய்ய

வானத்தில் நீ வெண்ணிலா ..... வெளிச்சம் உன் சிரிப்ப்பில்
என்னை தானே தேடுதே

உன்னை பாராமல் என்னை காணாமல் நெஞ்சம் தேட
நெஞ்சுக்குள் பெய்திடும் பேய் மழை
ஓர கண்ணில் தேடும் அழகில்... பேய் மழை பூ மழை ஆனதே !!!

அஞ்சல் இல்லாமல் கொஞ்சிய காலமே
நெஞ்சுல அஞ்சலை அஞ்சலை அவ என்ன
பார்த்த அழகுல சொக்கின மனசு புள்ள... ஏய் புள்ள
மீள முடிய சுகமது மது மது குடுத்தாலும் அஞ்சலை
கிடைக்காது நெஞ்சுக்குள் பெய்திடும் பூ மழை

அலை தேடி அவளை தேடி சென்றாலும்
முன்தினம் பார்த்தேனே அவளே நீ தானே
வசமே வாசமும் அங்கு தானே..
காலம் சென்றாலும் காதலும் நீதானே...

கண்ணே கலைமானே

நித்திரை கலைக்க ஆயிரங்கள் உண்டு
முத்தங்கள் குடுக்க நூறு இங்கு உண்டு
என்னுடன் என்றும் இருக்கு நீ ஒன்றே ஒன்று !!

கண்ணே கலைமானே கலங்காதே தேசம் கண்டு
நேசம் இங்கு உண்டு, ரோசம் இருந்த நாடு ,
வீரம் வெளைந்த மண்ணு இன்று கூறு போட்டு
நீரில்லா ஆறு மனிதர்களால் அனைக்க பட்டு
அணைக்கபடா மனம் இங்கு போலி முத்தங்கள்
நினைத்து நித்திரை களைந்து நிஜங்கள் மறந்து !!

I Miss you

சொக்கிய மனம் கசக்குதே ,
தேடுதே உன்னையே நிதம் நிதம் ,
இந்நொடி நீ இருந்தால் எப்படி இருக்கும் என்றே
அந்நொடி தேடி சில்லிட்டு காத்திருக்கும் என்
திக் திக் நெஞ்சம் ,
டிக் டிக் கரத்துக்கும் சூடு வைத்தால்
என் சிலிர்ப்பு அடங்குமோ..

கடி கார முள் கூட துன்பப்பட காணாய்,
நீ கண்ணீர் விடாமல் நான் காக்க ,
குடு குடுவென புன்சிரி முத்துடன் வந்திடு!!
I Miss You !!

Followers